வியாழன், 30 அக்டோபர், 2014

32.அங்கே அதன் எடை சம்பந்தமாக நீங்கள் கவனித்தது என்ன?


  • நான் கண்டவைகள் இவைகள் தான்,ஒரு ஆரோக்கியமான மனிதரிடம் இருந்து பெற்ற அமுரிக்கு மூன்று அவுன்சு அல்லது சற்று குறைவான,கூடுதலாக அதற்கு இணையான ஜலத்தோடு ஓப்பிடும் போது  சுமாராக எண்பது (80)அரிசி எடை. எடையில் வித்தியாசப் படுகிறது.
  • அதிலிருந்து மற்றொன்றும் கண்டேன்.முன் சொன்ன சமமான எடையில் எடுக்கப்பட்ட அமுரியையும்,ஊற்று ஜலத்தையும் வாலையில் வடித்த பின் அமுரியில் உள்ள அதிக பட்சமான உப்புக்கள் வாலையிலேயே விடுபட்டு போகின்றன.
  • எடையில் வித்தியாசம் இருப்பது உறுதியாகிறது.  

அவைகளின் சுபாவம்,பண்பு குறித்து என்ன கண்டீர்கள் ?


தொடரும் .,

31.உங்களுடைய சொந்தப் பாணியில் விளக்குங்கள் ?


  • அமுரிக்கு முறையோடு எது எது அத்தியாவசியமானதோ அவைகள் யாவும் அமுரி உப்பில் நிறைந்துள்ளது.
  • அதன் மணம் அதி நெடி உள்ளதாக இருக்கும்.
  • அதன் ருசி செய்பாக,கைபாக வித்தியாசங்களுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும்.
  • அதாவது சில சமயங்களில் உப்பின் சுவை போன்றும்.
  • அமுரியின் அமுரியின் அம்சமான உப்பின் தன்மை போலும் இருக்கும்.
அங்கே அதன் எடை சம்பந்தமாக நீங்கள் கவனித்தது என்ன?

தொடரும்., 

30.அமுரியில்அபரிதமான கோழைப்பொருள்(சளி)இருப்பது எப்படி தெரியவரும் ?


  • அது எப்படி எனில் 
  • முதலில் அதனது ருசியிலிருந்தும்,
  • இரண்டாவதாக அதனுடைய எடையிலிருந்தும்,
  • மூன்றாவதாக அதனுடைய தனித்த புனித குணத் தன்மையிலிருந்தும் அதனை கண்டறியலாம். 


உங்களுடைய சொந்தப் பாணியில் விளக்குங்கள் ?

தொடரும் .,

29.மேலும் தெளிவாக புரியும் படி நீங்களே சொல்லவும்?


  • உனக்கு தெரியும்.நாம் அருந்தும் தண்ணீர் நீர் பையை சென்றடைகிறது.
  • அதன் தனிப்பட்ட குணத்தோடு ஒரு பகுதி அமுரியாக வெளிஏற்றப் படுகிறது.(இரத்தத்திலிருந்து பிரிந்து அதன் தனித்த குணம்,மனத்துடன், காடியாய் நீராக கழிந்து போகிறது).
  • இது பொருள்களில் ஆழ்ந்து ஊடுருவிப்பாயும் தன்மை உடையது.
  • அமுரி,ரத்தம் இரண்டிலும் காணும் உப்பின் தன்மை ஒன்று போலவே மாறுபாடு அடைவதில்லை.வேறு துறைகளில் காரியப் படாதவரை.
  • ஆதலால் எதுவாய் இருப்பினும் அமுரியில் கலந்திருப்பது உப்பு உள்பட லாபமற்ற கோழை பொருளே. 

அமுரியில்அபரிதமான கோழைப்பொருள்(சளி)இருப்பது எப்படி தெரியவரும் ?

தொடரும்., 


28.எங்கிருந்து இந்த சளி போன்ற கோழை பொருள் வந்தது ?அல்லது (பயனற்ற )ருசியற்ற நீர் கோவை உருவாகிறது ?


  • முக்கியமாக நாம் அருந்தும் பலவகை பானங்களில் இருந்தும் இது (கோழை பொருள் ) கிடைக்கிறது .
  • இருப்பினும் எல்லாப் பொருள்களும் அதற்குரிய கோழைப் பொருளை பெற்றுள்ளது.
மேலும் தெளிவாக புரியும் படி நீங்களே சொல்லவும்?


தொடரும்.,

27.குறிப்பாக இயற்கையின் அம்சமான அமுரியின் தன்மைக்கு,வித்தியாசமான வேறு எந்தப் பொருளாகிலும் அமுரியில் உள்ளனவா ?


  • வித்தியாசமான பொருள்கள் இருக்கின்றன.
  • அவைகள் முறையே,நீர்த்த,சளி போன்ற ஒரு பொருள்.
  • நாம் சாப்பாட்டுடன் சாப்பிடுகிறோமே கடல் உப்பு அது.
  • இவைகள் அந்த அமுரியில் முழுமையாக செரிக்கப் படாமல் (ஜீரணமாகாமல் )அப்படியே இருந்து கொண்டிருக்கும்.
  • பாகப்படுத்தும் போது இதனை அதிலிருந்து பிரித்து எடுத்து விட வேண்டும்.
  • அப்படி பாகப்படும்  பொழுது (இவைகளால் மேலும் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை,என்று வரும்போது போதுமான நேரத்திற்கு பிறகு பிரித்து விட வேண்டும் )காரியம் முடிகிறது.

எங்கிருந்து இந்த சளி போன்ற கோழை பொருள் வந்தது ?அல்லது (பயனற்ற )ருசியற்ற நீர் கோவை உருவாகிறது ?

தொடரும்.,

புதன், 29 அக்டோபர், 2014

26.அதனுடைய எந்த பகுதி அப்படி உள்ளது ?



  • ஆவியாவதும்,அதிக நிலையானதும் ஆகும்.
  • அதனை எவ்வகையில் பாக படுத்த கருதுகிறோமோ அதற்கு ஏற்றார் போல் இதனை அநேக வகைகளாக மாற்றமுறச் செய்யலாம்.

குறிப்பாக இயற்கையின் அம்சமான அமுரியின் தன்மைக்கு,வித்தியாசமான வேறு எந்தப் பொருளாகிலும் அமுரியில் உள்ளனவா ?

தொடரும்.,

25.மிருகாதிகளின் அமுரியை காட்டிலும்,மனித இனத்தின் அமுரியில் உள்ள வஸ்துக்கள்தான் அதிக உன்னதமானதா ?


  • பலமடங்கு உன்னதமானது.(அமுரி )
  • அது ஒரு கழிக்கப்பட்ட பொருளேயாயினும்,அதன் உப்பானது இந்த பிரபஞ்ச முழுவதிலும் அதற்கு இணையான ஒரு பொருள் இயற்கையில் எங்கேயும் இல்லை.அது அத்தனை சிறந்து.


அதனுடைய எந்த பகுதி அப்படி உள்ளது ?

தொடரும் .,

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

24.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?


  • மனித உடலில் இருந்து வெளியேறும் மனிதனுடைய இரத்தம் அல்லது மனிதனுடைய அமுரி.
  • அமுரி என்பது புறத்தே கழிக்கப்படும் அப்புறப் படுத்தப் படும் பொருளாகும்.
  • அதனுடைய உன்னதமான பொருள் பகுதி ரத்தத்திலிருந்து கிடைப்பதுதான்.
  • இந்த இரண்டு பொருள்களுமே ஆவியாகி நிலையான உப்பை வழங்குகிறது.
  • அதனை எப்படி சேகரிப்பது தயாரிப்பது என்பது குறித்து உனக்கு த் தெரிந்திருக்குமாயின் வாழக்கையில் விலை மதிக்க முடியாத அதி உன்னதமான பளிங்கொத்த வாசமிக்க ஒரு மெழுகினை நீ அடைவாய். 
7.மிருகாதிகளின் அமுரியை காட்டிலும்,மனித இனத்தின் அமுரியில் உள்ள வஸ்துக்கள்தான் அதிக உன்னதமானதா ?

தொடரும்.,

23.எது அதி உன்னதமான உப்பாகும் ?


  • நீ இதை தெரிந்து கொள்ள விரும்பினால் (நீ )உனக்குள்ளேயே சிந்தனையில் இறங்கி எதிலிருந்து பெறப்படுகிறது என்று சிந்தனை செய்தால் நீயே அதனை சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
  • அதோடு அந்த உப்பு ரோமாபுரியின் அக்னி தேவதைக்கு (vulcan ) உரியது என்பதும் விளங்கும்.நீ அதை நேரில் பார்ப்பாயானால் அதனது தோற்றத்தை கண்டும் நீ புரிந்து கொள்ள கூடும்.



6.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?

தொடரும் .,

22.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ?


  • நான் உனக்கு சொல்லிஇருக்கிறேன் அது ஒரு உப்பு என்று.
  • நெருப்பு அதனை சூழ்ந்துள்ளது,(அங்குள்ள )ஜலம் அந்த நெருப்பினை விழுங்கி விட்டது.
  • அப்படி விழுங்கி விட்ட போதிலும் அந்த நெருப்பின் தன்மையை அதனால் மிஞ்ச முடியவில்லை.
  • அதனால்தான் அது ஞானிகளுடைய நெருப்பாக படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த முரட்டுப்  பொருள் நெருப்போடு இணைந்து எரிகிறது.
  • நாம் நம் ஜலத்தோடு இருக்கிறோம்.


5.எது அதி உன்னதமான  உப்பாகும் ?  


தொடரும்.,

21.இதற்கு இணையான பொருள் எது ?


  • முன்னே சொன்ன பொருள் உனக்கு தெரியுமாயின்,இதற்கு இணையான மற்றோரு பொருள் அது இதுதான் என்பதை நீ சிரமமின்றி தெரிந்து கொண் டிருப்பாய்.
  • ஆதாலாலே அதனை தேடுவாயாக,ஏனெனில் இக்கலையில் உழைப்பவர்களுக்கு என்றே கடவுள் அப் பரிசினை படைத்துள்ளார்.
4.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ? 



தொடரும்.,

20.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?


  • அது அற்புதக் கலைத்திறனோடு படைக்கப் பட்ட வட்ட வடிவமாய்  சமைந்த ஒரு உன்னதமான உப்பு. 
  • அதி மதிநுட்பமும்,கலைத்திறனும் கொண்ட  ஒரு கலைஞனுடைய தேவைகள் எதுவாயினும் அதற்குரிய பதில்களை அது தன்னகத்தே கொண்டுள்ள வல்லபம் உள்ள பொருள்.இருந்த போதிலும்,
  • அது சாதாரணமாக தண்ணீரில் கரைந்து போகும்.ஒரு சாதாரண ஜடத்தன்மை கொண்ட உப்பு அல்ல.
  • ஆனால்,உப்பின் சுவை ஒத்த சாராயம் போன்றது.
  • அது சூட்டிலே பாகப்படும் போது அத்திரவத்தில் உள்ள ஈரத்தன்மை ஆவியாய் வெளியேறினும் அது திரண்டு கெட்டி பொருளாய் மாறுவதில்லை.
  • ஆயினும்,அதனது ஆவியின் சக்தி தனது நீர்மப் பரப்பில் எல்லா இடங்களிலும் சமமான அழுத்த நிலையில் வியாபித்து நிலைகொண்டு இருக்கும்.
  • இலகு தீயில் ஆவியாக மாறினும் வண்டல் போன்ற எப்பொருளையும் மிச்சம் விட்டு வைக்காமல் முற்றிலுமாய் ஆவியாக போய்விடும்.
  • இந்த ஆவி பொருள் அமிலமோ,அல்லது காராப் பொருளோ அல்ல.
  • ஆனால் உப்பே.
3.இதற்கு இணையான பொருள் எது ? 

தொடரும்.,

சனி, 25 அக்டோபர், 2014

19.அல்காஹஸ்ட் (THE SECRET OF THE LIQUOR ALKAHEST .("universal solvent")


  1.  அல்காஹஸ்ட் என்றால் என்ன ?
  • அல்காஹஸ்ட் என்பது எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதும்,எல்லாவற்றின் முழுமையான குணங்களைக் கொண்டதுமான இந்த பிரபஞ்சத்திற்கே உரிய தெய்வீக தன்மை பொருந்திய நாத நீராகும்.
  • ஒரே வார்த்தையில் விளக்குவதானால்,அகத்திலே தீயை தாங்கிய (அக்னி ஜலம் ) நெருப்புத் தண்ணீர் என்றும்.
  •  எதுவும் கலப்பட மற்றது.
  • அழிவுறாதது.
  • இது எல்லா பொருள்களிலும் ஊடுருவிப் பாய்ந்து அதனைத் திரவருபமாக கரைத்து அதன் அதனின் மேன்மையான திரவப் பொருளாக மாற்றிவிடும்.
  • எந்தப் பொருளாலும் இதனுடைய சக்தியை தாங்கிக்  கொள்ள முடியாது.
  • இதனது சம தன்மையான குணத்தால், இதனால்  பாகப்படும் எந்த வஸ்துக்களாலும் இது பாதிப்படைவதில்லை.
  • இதன் இயற்கை தன்மை கெட்டுப் போவதுமில்லை,அதற்கு பதிலாக அந்தந்த வஸ்துக்களுக்குக் கேற்ப தான் ஈடு கொடுத்து,அவைகளை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 
  • இது எல்லா வஸ்துக்களையும்,அதில் ஊடுருவிப் பாய்ந்து அவைகளை கரைத்து விட்ட போதிலும்,தான் முன்பு இருந்தது போலவே தனது உயர்வான பண்புகளையும்,புனித குணங்களையும் முழுமையான தனது இயற்கை குணத்தோடவே காணப்படும்.
  • இது ஆயிரமாயிரம் முறை வஸ்துக்களிலே ஊடுருவிப் பாய்ந்து காரியபட்டாலும் தான் முன்பு ஆரம்பத்தில் இருந்தது போன்றே தனது இயற்கை குணத்தினின்றும் சிறிதும் வழுவாது நிலைத்து நிற்கிறது.
  • நெருப்பின் தன்மையை ஒத்த தண்ணீர் என்று அழைக்கப்படும்.
  • கலப்பட மற்றதும்,அழியாத் தன்மை பொருந்தியதுமாம்.
  • இது எல்லாப் பொருள்களிலும் உள்ளே ஊடுருவிப் பாய்ந்து அதனைக் கரைத்து (அதன்-  அதனின் ) மேன்மையான திரவப் பொருளாக மாற்றி விடும்.
  • எந்த பொருளாலும் அதனுடைய சக்தியை தாங்க முடியாது.
  • அதனால் பாகப்படும் எந்த பொருளாலும்,அவைகள் பாகப்படும் போது தான்(பொருள் ) பாதிப்படைவதில்லை.
  • அந்த பொருள் கெட்டு போவதுமில்லை.
  • பொருள்கள் பக்குவப்படும் வரை அதற்கு தான் ஈடு கொடுத்திருக்கும்.
  • அதனை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 

தொடரும் .,

2.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

18.நாக கட்டு.








துத்தி இலையை அரைத்து 4.5 கிராம் சுத்தி செய்த சிறுகண் நாகத்திற்கு கவசம் செய்து முழ புடம் போட நீறும் .செம்பு வெள்ளியில் கொடுக்க பழுக்கும்.சகல நோய்களும் தீரும்.

17.சேர்மான வேதை (சிவவாக்கியர் .)

நல்ல வெள்ளி                                                              8 பங்கு 

கொன்று உயிர்ப்பித்த செம்பு                                     4பங்கு 

நாக கட்டு                                                                        2பங்கு 

தூய தங்கம்                                                                    2பங்கு 

வெண்காரம்                                                                   1பங்கு 

இவை அனைத்தையும் கூட்டி உருக்க 8 மாற்று பொன் கிடைக்கும்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

16.ஜெர்மன் சில்வர் 2.




நிக்கல் 2 பங்கு 

செம்பு  6 பங்கு 

நாகம்  2 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

15.ஜெர்மன் சில்வர்,(நகைகள் செய்ய ),






நிக்கல் 1 பங்கு 
செம்பு   3 பங்கு 
நாகம்    1 பங்கு 

இவை மூன்றையும் நன்றாய் உருக்கி நகைகள் செய்துகொள்ளவும்.

14.செயற்கை பொன்.




வெடியுப்பு -1/2 பலம் ,
படிகாரம் -1/2 பலம் ,
நவச்சாரம் -1 விராகனெடை ,


இவைகளை கல்வத்திலிட்டு 3 மணிநேரம் எருக்கன் பால் விட்டு அரைத்து,வில்லை தட்டி காயவைத்து 5 விரட்டியில் புடமிடவும்.இம் மருந்தை மேற்படி பால் விட்டு முன்போல் அரைத்து வி.த.கா. 5 விரட்டியில் புடமிடவும். இப்படி புடம் மொத்தம் 3 போடவும்.பஸ்பம்.கல்காரக் புட்டியில் பத்திர படுத்தவும்.இது குரு மருந்து.சுத்தி செய்த செம்பை குகையிலிட்டு உருக்கி மேற்படி பஸ்பத்தில் ஒரு சிட்டிகை போடவும்.நல்ல செயற்கை பொன்னாகும்.

13.செயற்கை வெள்ளி.





நிக்கல்                                 40  மில்லி கிராம்

செம்பு                                  20   மில்லி கிராம் 

கட்டி தகரம்                        40 மில்லி  கிராம் 

சேர்த்து உருக்க செயற்கை வெள்ளி யாகும்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

12.துருசு செந்தூரம்.

வேலிபருத்தி




வெள்ளை மந்தாரை 




துருசு விராகனிடை 1. (3.5 கிராம் )உத்தாமணிப் பாலில் போட்டு(துருசு பாலில் மூழ்கி இருக்கவேண்டும் ) சூரியப்புடம் வைத்து எடுத்து வேலிபருத்தி சாறு விட்டு அரைத்து வேலிபருத்தி இலையை அரைத்து வில்லைக்கு கவசமிட்டு  சீலைமண்  செய்து உலர்த்தி  சிறு புடம் போட செந்துரமாகும்.இதை தக்க அனுபானங்களில் கொடுக்க பல நோய்கள் தீரும்.வெள்ளை மந்தாரை பூவின் சாற்றில் செம்பை உருக்கி சாய்க்கவும்.இது போல் 7 முறை செய்யவும்.இந்த செம்பில் மேற்படி மருந்தை உருக்கு முகத்தில் கொடுக்க வாங்கும்.வேதையாகும்.

புதன், 22 ஜனவரி, 2014

11.வெள்ளி வித்தை.

 வெள்ளீயத்தைகுப்பை மேனி சாற்றில் 7 முறை உருக்கி சாய்த்து, தகடு தட்டி செங்கொடிவெலி பட்டை பலம் 1 (35 கிராம் ),வாலை ரசம் (லிங்க ரசம் ) விராகன் 1(3.5 கிராம் ),கற்பூர வெற்றிலை சாற்றில் அரைத்து அந்த தகட்டிற்கு பொதிந்து சீலை மண் செய்து கஜபுடம் மிட்டு ஆறி எடுக்க சித்தியாகும்.