ஞாயிறு, 26 அக்டோபர், 2014

23.எது அதி உன்னதமான உப்பாகும் ?


  • நீ இதை தெரிந்து கொள்ள விரும்பினால் (நீ )உனக்குள்ளேயே சிந்தனையில் இறங்கி எதிலிருந்து பெறப்படுகிறது என்று சிந்தனை செய்தால் நீயே அதனை சுமந்து கொண்டிருப்பது தெரியும்.
  • அதோடு அந்த உப்பு ரோமாபுரியின் அக்னி தேவதைக்கு (vulcan ) உரியது என்பதும் விளங்கும்.நீ அதை நேரில் பார்ப்பாயானால் அதனது தோற்றத்தை கண்டும் நீ புரிந்து கொள்ள கூடும்.



6.உங்களை பிராத்திக்கிறேன்.அது எது என்று எனக்கு கூறவும் ?

தொடரும் .,

22.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ?


  • நான் உனக்கு சொல்லிஇருக்கிறேன் அது ஒரு உப்பு என்று.
  • நெருப்பு அதனை சூழ்ந்துள்ளது,(அங்குள்ள )ஜலம் அந்த நெருப்பினை விழுங்கி விட்டது.
  • அப்படி விழுங்கி விட்ட போதிலும் அந்த நெருப்பின் தன்மையை அதனால் மிஞ்ச முடியவில்லை.
  • அதனால்தான் அது ஞானிகளுடைய நெருப்பாக படைக்கப்பட்டுள்ளது. 
  • அந்த முரட்டுப்  பொருள் நெருப்போடு இணைந்து எரிகிறது.
  • நாம் நம் ஜலத்தோடு இருக்கிறோம்.


5.எது அதி உன்னதமான  உப்பாகும் ?  


தொடரும்.,

21.இதற்கு இணையான பொருள் எது ?


  • முன்னே சொன்ன பொருள் உனக்கு தெரியுமாயின்,இதற்கு இணையான மற்றோரு பொருள் அது இதுதான் என்பதை நீ சிரமமின்றி தெரிந்து கொண் டிருப்பாய்.
  • ஆதாலாலே அதனை தேடுவாயாக,ஏனெனில் இக்கலையில் உழைப்பவர்களுக்கு என்றே கடவுள் அப் பரிசினை படைத்துள்ளார்.
4.இந்த அல்கஹாஸ்ட்டிற்கு அடுத்த பொருள் எது ? 



தொடரும்.,

20.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?


  • அது அற்புதக் கலைத்திறனோடு படைக்கப் பட்ட வட்ட வடிவமாய்  சமைந்த ஒரு உன்னதமான உப்பு. 
  • அதி மதிநுட்பமும்,கலைத்திறனும் கொண்ட  ஒரு கலைஞனுடைய தேவைகள் எதுவாயினும் அதற்குரிய பதில்களை அது தன்னகத்தே கொண்டுள்ள வல்லபம் உள்ள பொருள்.இருந்த போதிலும்,
  • அது சாதாரணமாக தண்ணீரில் கரைந்து போகும்.ஒரு சாதாரண ஜடத்தன்மை கொண்ட உப்பு அல்ல.
  • ஆனால்,உப்பின் சுவை ஒத்த சாராயம் போன்றது.
  • அது சூட்டிலே பாகப்படும் போது அத்திரவத்தில் உள்ள ஈரத்தன்மை ஆவியாய் வெளியேறினும் அது திரண்டு கெட்டி பொருளாய் மாறுவதில்லை.
  • ஆயினும்,அதனது ஆவியின் சக்தி தனது நீர்மப் பரப்பில் எல்லா இடங்களிலும் சமமான அழுத்த நிலையில் வியாபித்து நிலைகொண்டு இருக்கும்.
  • இலகு தீயில் ஆவியாக மாறினும் வண்டல் போன்ற எப்பொருளையும் மிச்சம் விட்டு வைக்காமல் முற்றிலுமாய் ஆவியாக போய்விடும்.
  • இந்த ஆவி பொருள் அமிலமோ,அல்லது காராப் பொருளோ அல்ல.
  • ஆனால் உப்பே.
3.இதற்கு இணையான பொருள் எது ? 

தொடரும்.,

சனி, 25 அக்டோபர், 2014

19.அல்காஹஸ்ட் (THE SECRET OF THE LIQUOR ALKAHEST .("universal solvent")


  1.  அல்காஹஸ்ட் என்றால் என்ன ?
  • அல்காஹஸ்ட் என்பது எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதும்,எல்லாவற்றின் முழுமையான குணங்களைக் கொண்டதுமான இந்த பிரபஞ்சத்திற்கே உரிய தெய்வீக தன்மை பொருந்திய நாத நீராகும்.
  • ஒரே வார்த்தையில் விளக்குவதானால்,அகத்திலே தீயை தாங்கிய (அக்னி ஜலம் ) நெருப்புத் தண்ணீர் என்றும்.
  •  எதுவும் கலப்பட மற்றது.
  • அழிவுறாதது.
  • இது எல்லா பொருள்களிலும் ஊடுருவிப் பாய்ந்து அதனைத் திரவருபமாக கரைத்து அதன் அதனின் மேன்மையான திரவப் பொருளாக மாற்றிவிடும்.
  • எந்தப் பொருளாலும் இதனுடைய சக்தியை தாங்கிக்  கொள்ள முடியாது.
  • இதனது சம தன்மையான குணத்தால், இதனால்  பாகப்படும் எந்த வஸ்துக்களாலும் இது பாதிப்படைவதில்லை.
  • இதன் இயற்கை தன்மை கெட்டுப் போவதுமில்லை,அதற்கு பதிலாக அந்தந்த வஸ்துக்களுக்குக் கேற்ப தான் ஈடு கொடுத்து,அவைகளை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 
  • இது எல்லா வஸ்துக்களையும்,அதில் ஊடுருவிப் பாய்ந்து அவைகளை கரைத்து விட்ட போதிலும்,தான் முன்பு இருந்தது போலவே தனது உயர்வான பண்புகளையும்,புனித குணங்களையும் முழுமையான தனது இயற்கை குணத்தோடவே காணப்படும்.
  • இது ஆயிரமாயிரம் முறை வஸ்துக்களிலே ஊடுருவிப் பாய்ந்து காரியபட்டாலும் தான் முன்பு ஆரம்பத்தில் இருந்தது போன்றே தனது இயற்கை குணத்தினின்றும் சிறிதும் வழுவாது நிலைத்து நிற்கிறது.
  • நெருப்பின் தன்மையை ஒத்த தண்ணீர் என்று அழைக்கப்படும்.
  • கலப்பட மற்றதும்,அழியாத் தன்மை பொருந்தியதுமாம்.
  • இது எல்லாப் பொருள்களிலும் உள்ளே ஊடுருவிப் பாய்ந்து அதனைக் கரைத்து (அதன்-  அதனின் ) மேன்மையான திரவப் பொருளாக மாற்றி விடும்.
  • எந்த பொருளாலும் அதனுடைய சக்தியை தாங்க முடியாது.
  • அதனால் பாகப்படும் எந்த பொருளாலும்,அவைகள் பாகப்படும் போது தான்(பொருள் ) பாதிப்படைவதில்லை.
  • அந்த பொருள் கெட்டு போவதுமில்லை.
  • பொருள்கள் பக்குவப்படும் வரை அதற்கு தான் ஈடு கொடுத்திருக்கும்.
  • அதனை ஒரு உன்னத பொருளாக தோற்றம் செய்யும். 

தொடரும் .,

2.அது எந்த பொருளால் படைக்கப்பட்டது ?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

18.நாக கட்டு.








துத்தி இலையை அரைத்து 4.5 கிராம் சுத்தி செய்த சிறுகண் நாகத்திற்கு கவசம் செய்து முழ புடம் போட நீறும் .செம்பு வெள்ளியில் கொடுக்க பழுக்கும்.சகல நோய்களும் தீரும்.

17.சேர்மான வேதை (சிவவாக்கியர் .)

நல்ல வெள்ளி                                                              8 பங்கு 

கொன்று உயிர்ப்பித்த செம்பு                                     4பங்கு 

நாக கட்டு                                                                        2பங்கு 

தூய தங்கம்                                                                    2பங்கு 

வெண்காரம்                                                                   1பங்கு 

இவை அனைத்தையும் கூட்டி உருக்க 8 மாற்று பொன் கிடைக்கும்.