திங்கள், 26 ஆகஸ்ட், 2013

8.கௌரி கட்டு.

கருவங்கத்தை எலுமிச்சம் பழ சாற்றால் அரைத்து கௌரியின் மேல் பூசி அதன் மேல் துருசை மேற்படி சாற்றால் அரைத்து பூசி காய்ந்தபின்கல் உப்பையும் அரைத்து கவசித்து 30 நாழிகை வெயிலில் உலர்ந்த பின்பு,உப்பை மேலும் கீழும் கொட்டி 1 சாமம் எரித்து இறக்கி ஆறிய பின் எடுக்க கௌரி கட்டாகும். மதி ரவியில் வேதை.  

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

7.செம்பு சுத்தி

அடை வைத்த கோழி கழி கிற போது எச்சத்தில் வெள்ளை விழும்,அந்த வெள்ளையும் எருக்கன் பாலும் சேர்த்தரைத்து சல்லி காசுகளுக்கு பூசி கிளிஞ்சில் செப்பில் வைத்து முழப்புடமிட செம்பு சுத்தியாகும்.மேல் வேலைக்கு வைத்துக்கொள்ளவும்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

6.ரச வெள்ளி.






 வயலில் இருக்கும் பல்லிப்பூண்டை சமூலமகா அரைத்து குகை பிடித்து அதில் ரசத்தை விட்டு மூடி சீலை செய்து 1 விராட்டியில் புடமிட வெள்ளியாம்.